7/1/2011
“நட்பு என்பது இனிமையான சுமை அருமையான வாய்பல்ல”
“கடந்த காலத்தில் நாம் இழந்தவைகள் அனைத்தும், எதிர்கால நலவாழ்விற்கு நாம் போட்ட முதல்கள்”
மேற்கண்ட இரண்டு பொன் மொழிகளும் எனது இளமையில் யாரோ எனக்கு கூறியது.
“காபிர்களை [இறை மறுப்போர்] உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம்” இது ஒரு ஹதீஸ்ஸின் கருத்து.
நண்பர் - 1 .
திரு.I.சாம் ஜெகன்.B.A.,B.L. வழக்குரைனர் கொடைக்கானல்.சுமார் இருபது ஆண்டுகளாக பழக்கம்.
தங்களிடம் இரண்டு விஷயங்கள் பகிர்ந்து கொள்ள ஆசை.
1. தங்களின் தகப்பனார் அவர் மரணத்திற்குமுன் என்னிடம் கொடுத்த ரூபாய் முப்பது ஆயிரம்,மற்றும் தாங்கள் அவர் மரணத்திற்குபின் என்னிடம் கொடுத்த இருபத்திஐந்து ஆயிரம் ரூபாய் ஆக ஐம்பத்தய்ந்து ஆயிரம் ரூபாய்க்கு எழுத்து பூர்வமான ஆதாரம் என்ன இருக்கிறது ?
2 எனது குடும்பத்தினரின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமான அந்த நிலத்தின் ஆவணங்களை தங்கள்வசம் அமானிதமாக கொடுத்துவைத்து,ஒருவேலை எனக்கு மரணம் வந்துவிட்டாலும் எனது குடும்பத்திற்கு எந்தப்பாத்திப்பும் வராது என்று நன்பினேன்.ஒருகாலகட்டத்தில் தங்களின் அனுமதி இல்லாமல் வேறு நபருக்கு நாம் விற்க முடிவுசெய்த தொகையில் முக்கால்வாசி பணத்துக்கு பேசி முடித்து ஆவணத்தை தருமாறு கேட்டபொழுது,தங்கள் மனைவி அவர்களின் சங்க அங்கத்தினர்கலுக்கு தேவை என குறிக்கிட்டபோதும் அந்த ஆவணங்கலை எம்மிடம் கொடுத்த விதம்....எண்ணிபார்கவும்.
நண்பர் : 2
சுரேஸ் பால்ராஜ் கொடைக்கானல்.
கொடைக்கானலில் எமது பக்கத்துக்கு வீட்டுக்காரர். 15 ஆண்டுகள் பழக்கம்.பல வியாபாரங்களில் எமது பங்காளி.
“எதற்கும் துனியாதவன்
எதையும் எதிர்பார்க்க முடியாது”
இந்த வார்த்தைகள் நண்பர் சுரேஸ் Linked in net work ல் பதிந்தவை.
பணம்:
1.பணம் என்பது என்ன?
2.எதற்காக சம்பாதிக்கிறோம் ?
3.அதை எப்படி சம்பாதிக்க வேண்டும் ?
“பணம் என்பது தேவைகளுக்கு ஒரு தேவை”
நமது தேவை என்பது --- நம்மை சார்ந்து இருக்கும் மனைவி மக்கள் மற்றும் பெற்றோரின் உணவு,உடை,கல்வி மற்றும் இருப்பிடம் போன்றவைகள் நிறைவேற்ற....
நாமும் நம்மை சார்ந்து இருப்போறும் எதிர்வரும் காலங்களில் சுயதேவைகளுக்காக சிரமபட்டுவிடக்கூடாது என்பதக்காக ... சேமிப்பு.
சமுக அந்தஸ்து.
அதாவது நாம் வாழும் சமுகம் நமக்கு உரிய மரியாதையை கொடுக்கவேண்டும்.
சமுக மரியாதையை என்பது நாம் கொண்ட கொள்கை, மாறும் நமது அன்றாட வாழ்வில் நமது
சக மனிதர்களிடம் நாம் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்து தீர்மானிக்கப்படும்.
“ஒரு மனிதனின் எதிர்கால வாழ்வு அவன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அவனின் எதிர்வினையே தீர்மானிக்கும். எதிர்வினை அவன் கொண்ட கொள்கையின் வெளிப்பாடு”
உறையாடல் தொடரும்....
No comments:
Post a Comment