என்னதான் வேண்டும் எனக்கு ? இறுதி பயணத்திற்கு(மரணம்)தயாராகும் வேளை... மனமோ... எமது தாய் தந்தையரின் தொப்பில் கொடி உறவுகளை பாச கயிற்றில் இனைத்திடவும்,.... வாழ்வில் அரங்கேறும் சுகம் - துக்கங்ளை பகிர்ந்திடுவதன் மூலம் ஓருவருக்கொருவர் ஆதரவு கரம் நீட்டவும் ஆசை. ...... எமது ஆசைகளை ஏக இறைவனை அடையும் படிக்கட்டுகளாக மாற்றவேண்டும் ..... நம்பிக்கைதானேவாழ்க்கை..நம்பிகையுடன் எமது செயல் திட்டத்தைப் பகிர்வேன் Mobile :9345562420.
Saturday, January 22, 2011
இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: வழக்கு - 1 எனக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்...
இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: வழக்கு - 1 எனக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்...: "10/1/2011.கீழ்க்கண்ட மூன்று கேள்விகளுக்கு பதில் தெரியவேண்டியதுஅவசியம்.- இந்த வலைப்பூ வெளியீடுவதன் நோக்கம..."
Saturday, January 8, 2011
ஒரு இந்தியனின் இஸ்லாமிய பார்வை. ஆய்வு கட்டுரைகள்: உள்ளக்குமுறல் [Ibrahim]- 4.
ஒரு இந்தியனின் இஸ்லாமிய பார்வை. ஆய்வு கட்டுரைகள்: உள்ளக்குமுறல் [Ibrahim]- 4.: "9/1/2011 நேற்று நடந்த நாடகம்: கபாவை கட்டிய நபியின் பெயர் கொண்ட,சென்னையில் வசிக்கும் எமது கோடிஸ்வர நண்பர் தமது ஒரு இடத்தை விற்பனை செய்ய குறித..."
உள்ளக்குமுறல் [Ibrahim]- 4.
9/1/2011
நேற்று நடந்த நாடகம்:
கபாவை கட்டிய நபியின் பெயர் கொண்ட,சென்னையில் வசிக்கும் எமது கோடிஸ்வர நண்பர் தமது ஒரு இடத்தை விற்பனை செய்ய குறித்த நேரம் மாலை ஆறு மணி.எம்மை தவிர்த்து மாற்றுமத ஆறு நபர்கள் எட்டு மணி நேரம் காத்திருந்தும் நண்பர் பொய் சொல்லி ஏமாற்றி விட்டார்.
ஒரு முஸ்லிம்க்கு இந்த செயல் ஆகுமானதா ? இதுவே இன்றைய .....சிந்தனை.
5.40 மணிக்கு கொஞ்சம் தாமதமானலும் நான் வந்து விடுவேன்...6.30 மணிக்கு ஒரு டீ சாப்பிட்டுவிட்டு தாமதியிங்கள்....8.10 க்கு...டயர் பஞ்சர் வரமுடியாது...இவை அனைத்தும் சென்னையில் இருந்து நீர் கூரிய வார்த்தைகள்
ஏன் இந்த பித்தலாட்டம்..?
மாற்று மத நண்பர்களின் நேரத்தை திருட உமக்கும்,எனக்கும் என்ன உரிமை இருக்கிறது ?
ஒரு முஸ்லிம் உயிரே போனாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டாமா ? நாளை மறுமை நாளில், நீரும் நானும் பதில் சொல்லியாக வேண்டும்.....
நேற்று வாழ்க்கையில் இனி உம்மை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்ககூடாது...என வருந்தி துவா கேட்டேன்...ஆனால்... ஏன்... இந்த பித்தலாட்டதிற்கு முழுவதும் நான்தான் காரணம். ?
நான் தங்களிடம் பழகிய முறையில் ஏதோவொரு தவறு நடந்துள்ளது..புரியவில்லை....எது எப்படி இருந்தாளும் அந்த நண்பர்களுக்கு செய்த துரோகத்திற்கு பரிகாரம் என்ன ?
Thursday, January 6, 2011
கிறிஸ்துவ நண்பர்களுடன் ஓர் இஸ்லாமியனின் உரையாடல்:
7/1/2011
“நட்பு என்பது இனிமையான சுமை அருமையான வாய்பல்ல”
“கடந்த காலத்தில் நாம் இழந்தவைகள் அனைத்தும், எதிர்கால நலவாழ்விற்கு நாம் போட்ட முதல்கள்”
மேற்கண்ட இரண்டு பொன் மொழிகளும் எனது இளமையில் யாரோ எனக்கு கூறியது.
“காபிர்களை [இறை மறுப்போர்] உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம்” இது ஒரு ஹதீஸ்ஸின் கருத்து.
நண்பர் - 1 .
திரு.I.சாம் ஜெகன்.B.A.,B.L. வழக்குரைனர் கொடைக்கானல்.சுமார் இருபது ஆண்டுகளாக பழக்கம்.
தங்களிடம் இரண்டு விஷயங்கள் பகிர்ந்து கொள்ள ஆசை.
1. தங்களின் தகப்பனார் அவர் மரணத்திற்குமுன் என்னிடம் கொடுத்த ரூபாய் முப்பது ஆயிரம்,மற்றும் தாங்கள் அவர் மரணத்திற்குபின் என்னிடம் கொடுத்த இருபத்திஐந்து ஆயிரம் ரூபாய் ஆக ஐம்பத்தய்ந்து ஆயிரம் ரூபாய்க்கு எழுத்து பூர்வமான ஆதாரம் என்ன இருக்கிறது ?
2 எனது குடும்பத்தினரின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமான அந்த நிலத்தின் ஆவணங்களை தங்கள்வசம் அமானிதமாக கொடுத்துவைத்து,ஒருவேலை எனக்கு மரணம் வந்துவிட்டாலும் எனது குடும்பத்திற்கு எந்தப்பாத்திப்பும் வராது என்று நன்பினேன்.ஒருகாலகட்டத்தில் தங்களின் அனுமதி இல்லாமல் வேறு நபருக்கு நாம் விற்க முடிவுசெய்த தொகையில் முக்கால்வாசி பணத்துக்கு பேசி முடித்து ஆவணத்தை தருமாறு கேட்டபொழுது,தங்கள் மனைவி அவர்களின் சங்க அங்கத்தினர்கலுக்கு தேவை என குறிக்கிட்டபோதும் அந்த ஆவணங்கலை எம்மிடம் கொடுத்த விதம்....எண்ணிபார்கவும்.
நண்பர் : 2
சுரேஸ் பால்ராஜ் கொடைக்கானல்.
கொடைக்கானலில் எமது பக்கத்துக்கு வீட்டுக்காரர். 15 ஆண்டுகள் பழக்கம்.பல வியாபாரங்களில் எமது பங்காளி.
“எதற்கும் துனியாதவன்
எதையும் எதிர்பார்க்க முடியாது”
இந்த வார்த்தைகள் நண்பர் சுரேஸ் Linked in net work ல் பதிந்தவை.
பணம்:
1.பணம் என்பது என்ன?
2.எதற்காக சம்பாதிக்கிறோம் ?
3.அதை எப்படி சம்பாதிக்க வேண்டும் ?
“பணம் என்பது தேவைகளுக்கு ஒரு தேவை”
நமது தேவை என்பது --- நம்மை சார்ந்து இருக்கும் மனைவி மக்கள் மற்றும் பெற்றோரின் உணவு,உடை,கல்வி மற்றும் இருப்பிடம் போன்றவைகள் நிறைவேற்ற....
நாமும் நம்மை சார்ந்து இருப்போறும் எதிர்வரும் காலங்களில் சுயதேவைகளுக்காக சிரமபட்டுவிடக்கூடாது என்பதக்காக ... சேமிப்பு.
சமுக அந்தஸ்து.
அதாவது நாம் வாழும் சமுகம் நமக்கு உரிய மரியாதையை கொடுக்கவேண்டும்.
சமுக மரியாதையை என்பது நாம் கொண்ட கொள்கை, மாறும் நமது அன்றாட வாழ்வில் நமது
சக மனிதர்களிடம் நாம் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்து தீர்மானிக்கப்படும்.
“ஒரு மனிதனின் எதிர்கால வாழ்வு அவன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அவனின் எதிர்வினையே தீர்மானிக்கும். எதிர்வினை அவன் கொண்ட கொள்கையின் வெளிப்பாடு”
உறையாடல் தொடரும்....
Tuesday, January 4, 2011
சகோதரர் ஹாஜி அப்பாஸ் அவர்களுடன் இஸ்லாமிய உரையாடல்:
5/1/2011.
28/12/2010 அன்று கஸ்து நாள்.கஸ்து முடிந்து வீடு திரும்பும் போது அவர் என்னிடம் “எனக்கு மிகக்குறைந்த அளவே குர்ஆன் ஓத தெரியும்.அதன் பொருள் உணர்ந்து ஓதினால் ...மக்காவில் ஜூம்மா பயானில் எல்லோரும் அழுக நாம் பொருள் தெரியாது...இருவரும் ஏதாவது முயற்சி செயயனும்”
உண்மைதான்..நன்பரே அரபு மொழி தெரியாதது நமக்கு இழப்புத்தான்...குறையை சரிசெய்வது எப்படி ?அரபு மொழியில் புலமை அடைய முடியுமா ?
முதலில் நாம் தினமும் செய்து கொண்டிருக்கும்
இபாதத்தில் வரும் அரபு வார்த்தைகளின் “உள்ரங்கம் ... வெளிரங்கமான அர்த்தங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்..இன்ஷாஅல்லாஹ்.
http://www.hajishemd.com/8/1/20111.
நன்பரே அரபு மொழியில் புலமை அடைவது நமது நோக்கம் அல்ல...இஸ்லாமை முழுமையாக புரிந்து கொள்ளுவதே நமது நோக்கமாகும்.
எனவே நமக்கும் நாம் சார்ந்த இஸ்லாமிய சமுதாயதத்திற்க்கும் உள்ள ஒரு நாள் நிகழ்வுகலை உன்னிப்பாகக் கவனித்து,அதை முறையாக ஆவனபடுத்தி பின்னர் முதிர்ந்த இமாம்களிடம் விளக்கம் கேட்டால் என்ன ?
Sunday, January 2, 2011
உள்ளக்குமுறல்கள்-3
உள்ளக்குமுறல்கள்-3
ஏக இறைவனே ! எம்மை புடம்போடுவதேன்?
எனது ஆன்மா துடிக்கிறதே...! இந்த மானிடர்களிடம் போராட முடியவில்லை ஏன்? நான்தான் பொய்,புரட்டு,மற்றும் உலக தேவைகளுக்காக யாரிடமும் வழக்காடுவதில்லை என்று நியாத் வைத்து வாழ்ந்து வருகின்றேனே ! பின் ...ஏன்...?
இன்னும் முழுமையாக உம்மிடம் சரனடைய வில்லையா ?
எனது நாக்கை பாதுகாக்க முயற்சிகள் ...... ஆனால் எனது கண்...?இறைவா உன்னை முழுமையாக சரன்நடைய ...
மீண்டும் சந்திப்போம்.
4/1/2011.
அணுவும் அசையாது.....அவன் உத்தரவு இல்லாமல்.
கவலை,மணஉளைச்சல்...ஈமானின் குறைபாடுதான்.நீ உறுதியாக நில்...இறை கட்டளையை கடுகளவும் மீறாதே..வணக்க,வழிபாடுகளில் மெத்தனம் காட்டாதே..மற்றவைகளை..அவன் வழிநடத்துவான். மீண்டும் சந்திப்போம்
Subscribe to:
Posts (Atom)